BREAKING NEWS : ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐயும் அமலாக்கத் துறையும் கைது செய்தனர்.

சிபிஐ வழக்கில் பார் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பார் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அவரது உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, ப. சிதம்பரத்திற்கு விசேஷ சிகிச்சை தேவையா என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையை ஆய்வு செய்த டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது.

அதே நேரத்தில் சிறையிலுள்ள சிதம்பரத்திற்கு கொசுவலை மற்றும் முகத்தில் அணிந்து கொள்வதற்கான மாஸ்க் ஆகியவற்றை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே