Breaking News : கதிர் ஆனந்த் உட்பட 4 பேர் எம்பிக்களாக இன்று பதியேற்பு

வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினரான கதிர் ஆனந்த், இன்று மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

மக்களவை தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடந்தது.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், புதியதாக தேர்வான 4 எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு சக எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே