ஜெ.அன்பழகன் மறைவால் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்; திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் – மு.க.ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.

இந்நிலையில், ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், திமுக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே