சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் என்ற வகையில் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
அரசின் விதிமுறைக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.