#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி:

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 12,773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 527 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 377 பேர் ஆண்கள், 150 பேர் பெண்கள்.

இன்று 30 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 50 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் (அரசு – 36, தனியார் – 14) உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே