BREAKING NEWS : கஜகஸ்தானில் 2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி பயங்கர விபத்து..!

பெக் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய ஆசியாவில் சீனா, ரஷ்யாவை எல்லைகளாக கொண்டு அமைந்துள்ளது கஜகஸ்தான்.

இங்குள்ள அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகர் நுர்-சுல்தானிற்கு ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இது பெக் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானத்தில் 100 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நிலைதடுமாறியது.

இதையடுத்து அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்தன. இதனால் ஏற்பட்ட தீ காரணமாக கரும்புகை மேலெழுந்தது.

உடனே அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றனர்.

பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே