கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் கிடையாது – ஏர் இந்தியா

10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் வழங்கப்படமாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் அலுவலக ரீதியிலான பயணங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தையேப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவ்வாறான நிறுவனங்களுக்கான தொகையை பல நிறுவனங்கள் முறையாக செலுத்தாததால் 268 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக ஏர் இந்தியாத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே 10 லட்ச ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு இணை சேவை வழங்கப்பட மாட்டாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே