வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன.

வங்கிகள் இணைப்புக்கும், வாரா கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஒரு பகுதியாக மதுரையில் தலைமை கனரா வங்கி முன் நூற்றுக் கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகள் இணைப்பால் 2000 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன எனவும், தொழிலதிபர்கள் கடன்களை பெற்று மோசடிகளில் ஈடுபடுவதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே