நோபல் பரிசு வென்ற அபிஜித்தின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம்: பிரதமர் மோடி

மத்திய அரசுக்கு எதிராக தான் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன என்று பிரதமர் மோடி தம்மிடம் நகைச்சுவையுடன் கூறியதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்று இருக்கும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துருக்கிறார்.

அபிஜித் பானர்ஜி நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட மோடி, அனைத்து தரப்பினருக்கும் அதிகாரமளித்தல் மீதான ஆர்வம் அபிஜித்திடம் தெளிவாக காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு துறைகள் குறித்து ஆரோக்கியமான மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

அபிஜித்தின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டிருந்த மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித், பிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது என்று பாராட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே