அமர்நாத் யாத்திரை ரத்து; ஆராதனைகள் காணொலியில் நேரலை – மத்திய அரசு அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் வழிபாட்டுத் தலத்தை நிர்வகிக்கக்கூடிய வாரியம் இன்று இதை அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமர்நாத் யாத்திரை இந்தமுறையும் ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு காரணமாக இருந்த பதற்ற நிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அமர்நாத் வழிபாட்டுத்தல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களின் மனதை கருத்தில்கொண்டு அமர்நாத் வழிபாட்டு தலத்தில் நடைபெறக்கூடிய ஆரத்தி வழிபாடு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே