எக்காரணத்தைக் கொண்டும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது: நெய்வேலியில் திருமாவளவன் ஆவேசம்

நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில்திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து நேற்று விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

நெய்வேலி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் சபா ராஜேந்திரனை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கருணாநிதி,ஜெயலலிதா இல்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதற்காக அதிமுக, பாமகவினர் போட்டி போட்டு வேலை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ரயில்வே, வங்கி மற்றும் என்எல்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி புறந்தள்ளப்படுகின்றனர்.

எக்காரணத்தைக் கொண்டும் அதிமுக வரவே கூடாது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பாஜகவினர் கால்பதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் விடமாட்டோம். அதிமுகவுக்கும், பாமகவுக்கும் வாக்களித்தால் பாஜகவுக்கு தான் அது போய் சேரும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே