நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஆதரவு தெரிவித்தார் என குறிப்பிட்டார்.