தமிழகத்தில் அகில இந்திய சித்தா மையம்; மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!!

அகில இந்திய சித்தா மருத்துவ மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நடப்பு நிதி ஆண்டிலே சித்த மருத்துவ மையத்தை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அருகே ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்; மத்திய அரசுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அகில இந்திய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் நிறுவப்படுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே