முதல்வரை திடீரென சந்தித்த நடிகர் சூரி..!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி, அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியில் தற்போதுள்ள சூழலையும், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியையும் கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமியே வரும் சட்டமன்ற தேர்தலில் களம்காண உள்ளார்.

இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகர் சூரி பூங்கொத்து கொடுத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷால் விஷ்ணுவின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் 2.69 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சூரி போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர்கள் சிங்கமுத்து, நடிகர் மனோ பாலா, நடிகை விந்தியா மற்றும் ரவி மரியா ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே