காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர் தொண்டு ஆற்றிய நடிகர் சசிக்குமார்!

கொரோனா தடுப்புக்காக காவல்துறையினருடன் இணைந்து மதுரையில் ஒரு நாள் தன்னார்வலர் தொண்டு செய்த நடிகர் சசிக்குமாருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தற்போது இந்தியாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி கொண்டிருக்க்கும் நிலையில், தமிழகம் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள நிலையில், மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு வரவில்லை என்பது பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 1 லட்சத்திற்கும் மேலான வழக்குகளும் 1 கோடிக்கு மேலாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு காவல் துறை வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திரைத்துறை மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் பல்வேறு வகையில் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நேற்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

“நாம் நலமாக இருக்க இவர்கள் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. அதை புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார்.

மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

One thought on “காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர் தொண்டு ஆற்றிய நடிகர் சசிக்குமார்!

  • arumai

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே