இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன்

கோவையில் இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக கோவை வந்த எல். முருகனுக்கு, அக்கட்சியினர் கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் வலியுறுத்தினார்.  

தமிழக சட்டமன்றத்தில் அதிக பாஜக எம்.எல்.ஏக்களை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டமன்றத்திற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் அதிகமானோரை அனுப்பி வைக்கும் முயற்சியில் தான் பயணிப்பேன் என்றும் தெரிவித்தார். 

கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே