வாழ்க்கை ஒருமுறை என்பதை உணர்ந்து, உடல் நலம் பேணுங்கள் என இளைஞர்களுக்கு நடிகர் அமீர்கான் அறிவுரை கூறியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் படப்பிடிப்பு தொடர்பாக நேற்று ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு வந்தார்.
அவரை சந்தித்து பேசிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசிய நடிகர் அமீர்கான், வாழ்க்கை ஒருமுறை என்பதை உணர்ந்து, இளைஞர்கள் உடல் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை இளைஞர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஆமிர்கான் அறிவுரை கூறினார்.