மதுரையில் 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து அசத்தி வரும் பட்டதாரி இளைஞர்

மதுரையில் ஐந்து ரூபாய்க்கு டீ விற்பனை செய்து பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.

மதுரை சமயநல்லூரை சேர்ந்த முதுகலை பட்டதாரி ராஜாராம் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் சுயதொழில் செய்ய முடிவு செய்ததார்.

இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஆவின் பாலகத்தை தொடங்கினார். இந்நிலையில் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஐந்து ரூபாய்க்கு டீ விற்பனை செய்கிறார்.

சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சில கடைகளில் டீ விலை உயர்த்தப்பட்டது. ஆனால் ராஜாராம், 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே