தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில் 975 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் புதிதாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசை மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

இதனை பரிசீலித்த மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டகளில் தலா 325 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. மாநில அரசு ரூ.130 கோடியும் மத்திய அரசு ரூ.190 கோடி நிதி வழங்க உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட உள்ள நிலையில், தற்போது மேலும் 3 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே