ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது இடங்களுக்கு வந்தனர்.

குறிப்பாக, அசைவ உணவுப்பொருள்கள் வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் முகாமில் அடைக்கப்படுவீர்கள் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுகிறாகள் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீதும் நடவடிக்கை தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே