ஏப்.14 வரை மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின்சாரம் துண்டிக்கப்படாது – அமைச்சர் தங்கமணி

மின்சார வாரிய தொழிலாளர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர் என்று சென்னை மின்சார வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.

ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்த இயலவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

மேலும் கடந்த 4 நாட்களில் மின்சாரத்துறைக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே