110 சவரன் கொள்ளைபோனதாக நாடகமாடிய மாமனார், மருமகள்

கன்னியாகுமரியில் வீட்டில் புதைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதாக கூறி மாமனாரும், மருமகளும் சேர்ந்து நாடகம் அரங்கேற்றி இருப்பது காவலர்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த ராஜய்யன் தனது வீட்டில் புதைத்து வைத்திருந்த 110 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில் ராஜய்யனின் குடும்பத்தாரை காவலர்கள் தனித்தனியே விசாரித்தனர்.

அதில் ராஜய்யன் குடும்பத்தினரிடம் 110 சவரன் நகையே இல்லை என்பதும் 10 சவரன் நகை மட்டுமே அவர் புகைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ராஜய்யன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தபோது அவரது மருமகள் மட்டும் முன்கூட்டியே வீட்டிற்கு திரும்பி கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

புதைத்து வைத்திருந்த 10 சவரன் நகையையும் விற்று அவ்வப்போது குடும்ப செலவிற்கு பயன்படுத்தியதாகவும், அதனை ராஜய்யனிடமிருந்து மறைக்கவே இக்கொள்ளை நாடகத்தை நடத்தியதாகவும் அவரது மருமகள் ஒப்புக்கொண்டர்.

இதையடுத்து 110 சவரன் நகைகள் கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த ராஜனையும், அவரது குடும்பத்தினரையும் காவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே