காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் – பிரதமர் மோடி

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் நாசிக்கில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்துப் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்கும் மத்திய அரசின் திட்டம், அரசியல் ஆதாயம் சார்ந்தது என்ற விமர்சனம் குறித்துப் பேசிய அவர், கால் நடைகள் ஓட்டுப் போடுவதில்லை என்றார்.

கால்நடைகளின் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்கள் மற்றும் கருச்சிதைவு நோய்க்கு எதிராக ஆடு, மாடுகள், எருதுகள், பன்றிகள் உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து அளிக்க தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே