செல்போனில் பேசிக்கொண்டே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது 2-வது மாடியில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி.

22 வயதான இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

தற்போது இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. தாய் வீட்டிற்கு ஒரு வார காலத்திற்கு தங்க வந்த இவர், 17-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் 2-வது மாடிக்குச் சென்ற செல்வி, தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

2-வது மாடியிலிருந்து கீழே விழுந்த செல்வியின் தலையில் பலமாக அடிப்பட்டு மயக்கமடைந்தார்.

படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த செல்வியை மீட்ட பெற்றோர்கள் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார் செல்வி. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாடியிலிருந்து இளம்பெண் செல்பி சாலையில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே