போலீஸ் அதிகாரியாக மிரட்டும் யாஷிகா..வில்லனாக நடிக்கும் பிரபல இசையமைப்பாளர்

‘சல்பர்’ படத்தில் யாஷிகாவுக்கு வில்லனாக நடிக்க பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக யாஷிகா ஆனந்த் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும்‘சல்பர்’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இயக்குகிறார்.

முகேஷ் ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். மேலும் அவரே இந்தப் படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றுகிறார் நாயகி (யாஷிகா) பாரதி. அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த க்ரைம் டிபார்ட்மென்டில் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார்.

தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த தொலைபேசி அழைப்பு தன்னை ஏமாற்றுவதற்காக வந்திருப்பதாக பாரதி நினைக்க, பின்புதான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது.பின் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை ஆக்‌ஷன்-திரில்லர் கலந்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே