கொரோனாவை எதிர்கொள்ள உலக வங்கி நிதி

கொரானா தாக்குதலை எதிர்கொள்ள சுமார் 86 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொரானாவின் தாக்கம் இதுவரை 67 நாடுகளில் பரவியுள்ளது.

இவற்றில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதி இன்றி தவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் 86 ஆயிரத்து 400 கோடி ரூபாய் தொகையை ஒதுக்கி உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிதி, அவசர உதவியாக கருதப்பட்டு கொரானா பிடியில் சிக்கியுள்ள ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே