திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்தது ஏன்? – டி.ஆர்.பாலு விளக்கம்..!!

மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமரிடம் இதுவரை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தவில்லை என டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் திமுக எம்பிக்கள் திடீரென சந்தித்தனர். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரமதரிடம் வழங்கினோம் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.

தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் வராத அளவிற்கு முடிவு எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.

திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர் பாலுவுடன், திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்பிக்களும் சென்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே