பக்ரீத் பண்டிகையில் பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மதுரை வட இந்தியர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் விலங்குகளை கொல்வதற்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அரசின் கருத்தை அறிய அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரிய நிலையில், கொரோனா ஊரடங்கை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், 3 வாரங்களில் அறிக்கை தாக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.