#BREAKING : கோவை மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் நாளை மாலை 5 மணி முதல் இரண்டு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாளை மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரேனா பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 2வது நாளாக கரோனா பாதிப்பு ஆறு ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், கோவையில் இன்று புதிதாக 189 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே