கேரளத்தைச் சேர்ந்த சிறுமி வன்கொடுமை செய்து மரணம் ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த சிறுமி வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த சிறுமியை வன்கொடுமை செய்து மரணம் ஏற்படக் காரணமாக இருந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு வழக்கில், ராஜ்குமாரின் தண்டனையை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.