தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்கிறோம் – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் வருத்தத்தை ஏற்பதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார்.

அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். 

முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் மன்னிப்பை ஏற்பதாக சென்னை காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கு வரும் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்து , அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே