மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான இன்று 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், ஸ்பெஷலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதுகுறித்த விவரம் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.
சென்னையில் 119 கி.மீ தொலைவுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும். 277 கிமீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணி தொடங்கும்.
தமிழ்நாடு-கேராளவை ஒன்றிணைக்க நவீன வசதிகளுடன் கூடிய மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். 1.03 லட்சம் கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.