2வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது..!

நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று 26,102 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று காலை நிலவரப்படி 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று நண்பகலில் 100 அடியை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 100 அடியாகவும், நீர் இருப்பு 64.71 டிஎம்சியாகவும் உள்ளன.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குக் 14ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 900 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே