கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்தபோது காரில் தீ பற்றியது. இதனால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்து கொண்டுள்ளார்.

பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார்.

அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தில் நுழையும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, சசிகலா வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும்.

இதர வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்தபோது காரில் தீ பற்றியது.

இதனால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனால் அந்த பகுயில் பரபரப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே