இனி நடக்க வேண்டியது நடக்கும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பி விட்டார், இனி தமிழகத்தில் நடப்பது நடக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற்ற திமுகவின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மூன்று மாதத்தில் தேர்தலை சந்திக்க உள்ளோம். வரும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.

200 இடங்கள் இலக்கு என்று ஏற்கனவே கூறினேன், அது தவறு 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி எப்படி முதல்வரானார் என்று கூறினால் அவருக்கு கோபம் அதிகமாக வரும் என்று கூறிய ஸ்டாலின், ஆனால் அந்த உண்மை மக்கள் அனைவருக்கும் தெரியும் என கூறினார்.

பெங்களூரிவிலிருந்து அதிமுக கொடியுடன்‌ ஒருவர் வந்துகொண்டிருக்கிறார் என்றும்’ இனி இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும், ஆனால் நடக்க வேண்டியது நடக்கும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே