எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது: ரஜினிகாந்த்

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னெடுத்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழியாக இருந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

தேசபாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் நடிகர் ரஜினி காந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பதிவில் எந்த ஒரு இடத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வார்த்தைகளை நடிகர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே