மாணவர்களை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் – சீமான் ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை செய்தது யார் என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை குறிப்பிடாமல் எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சீமான், பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது எனவும் போராட்டத்தில் வன்முறை செய்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ரஜினியின் கருத்து என்ன என கேள்வி எழுப்பியுள்ள அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை ரஜினிகாந்த் எதிர்கிறாரா என்பதை முதலில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறையை, ஒடுக்குமுறையை மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது எனவும் நடிகர் ரஜினியின் கருத்தை சீமான் விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே