பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தின் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், பாடகர் எனப் பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது நாயகனாக ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு நாயகியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். இதர படக்குழுவினர் விவரம் தொடர்பான தகவல்கள் எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பாலாஜி குமாரின் படத்தை முடித்துவிட்டுத்தான், ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தொடங்கவுள்ளார் விஜய் ஆண்டனி. இதனை ‘கோடியில் ஒருவன்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே