சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், துணை முதல்வர் ஓபிஎஸ் உடன், முதல்வர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டனர்.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே