விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி – உத்தவ் தாக்கரே உறுதி

மகாராஷ்டிரத்தில் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கருத்தியல் முரண் கொண்ட இரு பிரிவுகள் ஒன்று சேர்ந்து ஆளும் இந்த அரசின் கீழ் விவசாயிகளின் மகிழ்ச்சிக்கான திட்டம் ஒன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதாவது கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ. 2 லட்சம் வரை பயிா்க் கடன்கள் பெற்ற விவசாயிகளின் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும் இந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரை ரூ. 2 லட்சம் வரை நிலுவையில் உள்ள பயிா்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இதனால் சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கடனாளிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து புனேவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே,

  • ஆட்சியமைத்தவுடன் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கருதினோம்.
  • அதனால், ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
  • தற்போது விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சா்க்கரை ஆலைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பெண்களில் அதிகமானோா் கருப்பையை அகற்றிக்கொள்வது குறித்த விவகாரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தலையிட வேண்டும் என்று மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் நிதின் ரௌத் வலியுறுத்தியுள்ளாா்.

அதாவது மாதவிடாய்க் காலங்களில், பணிக்கு வர முடியாததால், கூலி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதனால் இதுவரை 30,000 ஆயிரம் பேர் இப்படி கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர்.

இந்த விவகாரத்தை முதல்வர் தலையிட்டுத் தீர்த்து வைக்கும்படி சர்க்கரை ஆலையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே