நாடு முழுவதும் பயணிகளின் ரயில் சேவை மே 3-ம் தேதி வரை ரத்து செய்து ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு மே 3 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) காலை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரீமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே