இன்று முதல் 10 ம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு…

கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 10-ஆம் வகுப்பு பாடங்கள் இன்று முதல் (15.4.2020)  டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்பட உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மார்ச் 27 ம் தேதி தொடங்க வேண்டிய 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு , ஏப்ரல் 14 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தொடா்ந்து மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னா், பொதுத் தோவு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் 10 ம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயார் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களுக்கு , பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் புதன்கிழமை முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே