தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள், 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் ஆவர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம் என்றும், மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்பட்டது எனவும் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் – 52,741
வேலூர் – 50916
சென்னை – 49,235
திருவள்ளூர் – 48,950
விழுப்புரம் – 46,494.