#10thResult2020 : தமிழகத்தில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின் விவரம்!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள், 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் ஆவர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம் என்றும், மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்பட்டது எனவும் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – 52,741

வேலூர் – 50916

சென்னை – 49,235

திருவள்ளூர் – 48,950

விழுப்புரம் – 46,494.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே