சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த வகையில், சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோல் விலை 30வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
டீசல் விலையிலும் 20வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
சென்னையில் 30ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், 20 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.