கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான கேரள மாணவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரள மாணவி சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதனிடையே மாணவிக்கு திருச்சூர் மருத்துவமனையில் வைத்து தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் மாணவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவி திருச்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சூர் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய பட்டுள்ளார்.
திருச்சூர் மருத்துவ கல்லூரி தனி வார்டில் வைத்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.