திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மறைமுக தேர்தலுக்காக வகுப்பட்ட விதிகள் சட்டவிரோதமானவை அல்ல என்றும்;

எனவே மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே