PSBB பள்ளி முதல்வர், தாளாளர் மே 31இல் ஆஜராக சம்மன்..!!

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , அவர்களிடம் ஆபாசமாக பேசி புகைப்படங்களை அவர்கள் செல்போனுக்கு அனுப்பியதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் விசாரணாஇ நடத்தினர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன், இவ்விவகாரத்தில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

இதுகுறித்து அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்நிலையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பத்ம சேஷாத்ரி பள்ளி இயக்குனருக்கு மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பள்ளி இயக்குனர் ஷீலா ராஜேந்திரன், பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் முன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே