திருக்கழுக்குன்றம் காவல்நிலைய தலைமைக்காவலர் சதீஷ்குமார் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவியது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சதீஷ்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே