இரு சக்கர வாகனங்கள் ஆடம்பர பொருள் அல்ல, எனவே இதன் ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனங்களின் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதன் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “இது ஒரு நல்ல ஆலோசனையாகும், ஏனெனில் இரு சக்கர வாகனங்கள் ஆடம்பர பொருட்கள் வகையல்ல.
எனவே ஜிஎஸ்டி விகித திருத்தத்திற்கு தகுதியானது” எனத் தெரிவித்தார்.
இரு சக்கர வாகனங்களுக்கு தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்த சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
150 சிசி வரையிலான பைக்குகளுக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதமாக குறைக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.