கடந்த 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம். இந்த சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லும்.

இருப்பினும் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதிக்கீடு விகிதத்தை குறைத்து உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, 16 சதவீதத்திலிருந்து கல்வியில் 12 சதவீதமாகவும், அரசு வேலைவாய்ப்புகளில் 13 சதவீதமாகவும் மகாராஷ்டிரா மாநில அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கிடையே, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், “இந்த ஆண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது.

இருப்பினும் முதுகலை மருத்துவப் படிப்புக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது” என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மராத்தா சமூகத்தினருக்கு இது கருப்பு தினம் என பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவிக்கையில், “உச்சநீதிமன்றம் விதித்துள்ள இந்த இடைக்காலத் தடை, அடுத்த உத்தரவு வரை தொடரும்.

இதனால் இட ஒதுக்கீடு தொடர்பாக மராத்தா சமூகத்தினர் போராட்டம் செய்தலும் புண்ணியமில்லை.

எனவே இந்த நாள் மராத்தா சமூகத்தினருக்கு கருப்பு தினம்” என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே